மோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலி

Update: 2021-06-16 19:07 GMT
சோழவந்தான்
சோழவந்தான் பூமேட்டு தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது 45). டெய்லர். இவர் சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மகேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ்வரன் இறந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தென்கரை சாஸ்தா என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்