டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்

டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் நடந்தது.

Update: 2021-06-18 16:30 GMT
மதுரை,ஜூன்.
டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து நேற்று காலை முதல் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய மருத்துவக் கழகத்தின் மதுரை கிளை சார்பில் டாக்டர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் அரசு ஆஸ்பத்திரி அருகிலுள்ள கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. மருத்துவ கழக நிர்வாகிகள் ரவீந்திரன், மணிவண்ணன், அழகவெங்கடேசன், அனீத் மற்றும் சாவித்திரி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்