மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.

Update: 2021-06-19 19:50 GMT
பேரையூர்,

 பேரையூர் அருகே பழையூரை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 55). இவர் சம்பவத்தன்று வடகரைப்பட்டியில் பெயிண்ட் பொருட்களை வாங்கிக்கொண்டு பேரையூர்- சாப்டூர் சாலையில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்