கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-21 19:30 GMT
திருமங்கலம்,ஜூன்
கள்ளிக்குடி அருகே உள்ள இலுப்பங்குளத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 21). கட்டிட தொழிலாளியான இவர் 17 வயதே ஆன இளம்பெண்ணை கடத்திச் சென்று தஞ்சாவூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 
இது குறித்து அந்த இளம்பெண்ணின் தாய் கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தஞ்சாவூர் சென்று அவர்கள் இருவரையும் கள்ளிக்குடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளி நாகராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்