மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரையில் தற்போது பாதிப்பு குறைந்ததன் விளைவாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 689 ஆக குறைந்துள்ளது.
மதுரையில் தற்போது தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதன் விளைவாக கூடுதல் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 76 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதுபோல் இன்று(புதன்கிழமை) நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 34 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.