ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
மதுரை செல்லூர் பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
-
மதுரை செல்லூர் பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 பவுன் நகை திருட்டு
போலீசார் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தகவலின் பேரில் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று வீட்டில் கதவு, பீரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவான கைரேகை தடயங்களை சேகரித்தனர்.
மேலும் 2 வீடுகளில்...
அதே போன்று செல்லூர் கட்டபொம்மன் நகர், பாண்டியன் தெருவில் அஜித்குமார் (22) என்பவரது வீட்டு கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் பணம், நகை திருடு போகவில்லை. இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.