திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் 191 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-06-23 03:32 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 191 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது வரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 277 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 931 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,667 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 8 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்