நகை, வெளிநாட்டு பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, வெளிநாட்டுப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2021-06-24 23:28 IST
மதுரை,ஜூன்
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, 500 அமெரிக்கன் டாலர், 13 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
 இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்