கடையை உடைத்து திருட்டு

அலங்காநல்லூர் அருகே கடையை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2021-06-29 21:44 IST
அலங்காநல்லூர்,ஜூன்.
அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39). இவர் சிக்கந்தர்சாவடியில் மோட்டார் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் இந்த கடையை உடைத்து எல்.இ.டி.டி.வி, மடிக்கணினி, சி.சி.டி.வி. கேமரா, மற்றும் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இது பற்றிய புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்