மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் பலி

மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் பலியானார்.

Update: 2021-06-30 20:00 GMT
திருமங்கலம,ஜூலை.
திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு என்பவரது மனைவி அக்கம்மாள் (வயது 40). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவரது மகன் கார்த்திகைச் செல்வம் மோட்டார்சைக்கிளில் அக்கம்மாளை அழைத்துக் கொண்டு திருமங்கலம் சென்றார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அரசப்பட்டி அருகே வந்தபோது பின்னால் அமர்ந்து இருந்த அக்கம்மாளின் சேலை மோட்டார்சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அக்கம்மாள் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்