சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

Update: 2021-07-01 19:32 GMT
மதுரை,ஜூலை.
மதுரை சொக்கலிங்க நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சின்னத்தாய் (வயது 75). இவர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து அவர் மீது சாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னத்தாய் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்