மதுரையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

மதுரையில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-07-02 17:59 GMT
மதுரை,ஜூலை.
மதுரையில் நேற்று சுமார் 7 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் நேற்று 37 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் 70 ஆயிரத்து 620 பேர் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது 727 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 70 வயது முதியவர், 58 வயது ஆண், 42 வயது பெண் ஆகியோரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 61 வயது முதியவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்