மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

Update: 2021-07-03 18:43 GMT
பேரையூர்
மதுரை மாவட்டம் நாகையாபுரம் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக தங்களாசேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பூசலப்புரத்தை சேர்ந்த சந்திரசேகர்(வயது 59) என்பவர் இருசக்காக வாகனத்தில் 20 மதுபாட்டில்களை கொண்டு வரும் போது போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் பெரிய கட்டளையைச் சேர்ந்த செல்வமீனா(31) என்பவரிடமிருந்து 16 மதுபாட்டில்களையும், சென்னம்பட்டியை சேர்ந்த ராசு(72) என்பவரிடமிருந்து 20 மதுபாட்டில்களையும், சேடபட்டி போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்