மதுபாட்டில்களுடன் முதியவர் கைது
மதுபாட்டில்களுடன் முதியவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,ஜூலை.
சாப்டூர் போலீசார் மது விலக்கு சம்பந்தமாக அத்திப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பழையூரை சேர்ந்த ராமர் (வயது 67) என்பவர் விற்பனை செய்வதற்காக 24 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தபோது போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.