மினி வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

மினி வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.

Update: 2021-07-12 19:55 GMT
மேலூர்,ஜூலை.
தஞ்சாவூரில் இருந்து 8 பேருடன் மினி வேன் ஒன்று மதுரைக்கு வந்து கொண்டிருந்தது. மேலூர் நான்கு வழி சாலையில் சத்யபுரம் என்னுமிடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த வேனின் பின்னால் வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய அந்த வேன் சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் மதுரையை சேர்ந்த சிவராமன் (வயது 65) என்பவர் அதே இடத்தில் இறந்துபோனார். காயம அடைந்த 7 பேரையும் மேலூர் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்