சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-14 22:37 GMT
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 26). இவர் கோபி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்