29 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று 29 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2021-07-16 20:53 GMT
மதுரை
மதுரையில் நேற்று 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 13 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 69 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 35 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 71 ஆயிரத்து 526 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 482 ஆக மாறி உள்ளது. இதில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். இது போல் 145 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். மதுரையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1140 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்