மேலூர்
மேலூர் அருகே மேலவளவு பகுதியில் மதுரைக்கு வந்த தனியார் பஸ் ஒன்று நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பயணிகள் சிலர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.