என்ஜினீயர் குத்திக்கொலை

சேடப்பட்டி அருகே என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-07-19 20:49 GMT
உசிலம்பட்டி,

 சேடப்பட்டி அருகே உள்ள சின்னகட்டளையை சேர்ந்தவர் சங்கையா. இவருடைய மகன் முத்துராஜா(வயது 33). என்ஜினீயர். இவர் மும்பையில் எண்ணெய் ஏற்றுமதி கப்பலில் பணிபுரிந்து வந்தார்.. சமீபத்தில் விடுமுறையில் தனது சொந்த ஊரான சின்னக்கட்டளைக்கு வந்திருந்தார்.. இந்த நிலையில் நேற்று இரவு இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகத்தான் மகன் முத்துராஜா (28) என்பவருக்கும் திடீரென்று தகராறு ஏற்பட்டது. இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் என்ஜினீயர் முத்துராஜாவை இன்னொரு முத்துராஜா கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த என்ஜினீயர் முத்துராஜாவை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மற்றொரு முத்துராஜாவை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்