விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

மேலூர் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2021-07-19 20:53 GMT
மேலூர்,

மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள உ.புதுப்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருடைய மகன் முனிச்சாமி (வயது 21). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் உரங்கான்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கொட்டானிபட்டியில் ரோட்டில் குறுக்கே நின்ற வைக்கோல் ஏற்றிய வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே முனிச்சாமி இறந்தார்.இது குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்