மதுரை,ஜூலை
மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 23). பட்டதாரியான இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.