போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-21 19:59 GMT
மதுரை, ஜூலை.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 26). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரைவீரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்