விபத்தில் விவசாயி பலி

கொட்டம்பட்டி அருகே விபத்தில் விவசாயி பலியானார்.

Update: 2021-07-22 21:00 GMT
கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் ராமசாமி (வயது 35). விவசாயி. இவருடைய அண்ணன் மகள் சிங்கம்புணரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு ராமசாமி தனது உறவினர் ஆண்டிச்சாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கொட்டாம்பட்டி நத்தம் பிரிவு அருகே சென்ற போது சாலையோரத்தில் சைைக விளக்கு போடாமல் நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு ராமசாமி பரிதாபமாக இறந்தார். ஆண்டிச்சாமிக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் காளிதாசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்