சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், காமாட்சியை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்..இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.