பெண் மீது தாக்குதல்; கணவருக்கு வலைவீச்சு

பெண் மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-22 21:22 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், காமாட்சியை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்..இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்