நகை பறிப்பு

பெண்களிடம் 9 பவுன் நகை பறிப்பு

Update: 2021-07-24 20:01 GMT
மதுரை
மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 64). நேற்று முன்தினம் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி அவர் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு கோவில் வாசலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை யாரோ மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர்தங்கபுஷ்பம் (62). சம்பவத்தன்று இவர் மொபட்டில் நரிமேடு உழவர்சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று எஸ்தர் தங்கபுஷ்பம் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்