கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-07-26 16:42 GMT
திருப்பரங்குன்றம், ஜூலை
திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி (வயது 20). இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் மன விரக்தி அடைந்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்