25 பேருக்கு கொரோனா

25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-27 19:36 GMT
மதுரை,ஜூலை.
மதுரை மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 19 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று 23 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதில் 17 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 312 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மதுரையில் நேற்று கொரோனாவிற்கு 72 வயது முதியவர் இறந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1143 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்