கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி- ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு

கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு செய்தார்.

Update: 2021-07-27 22:39 GMT
கடத்தூர்
கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி இருப்பை பொறுத்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடும் முகாம்களில் பொதுமக்கள் நள்ளிரவில் இருந்தே குவிய தொடங்கினர். பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.இந்தநிலையில் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி வழங்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நடவடிக்கை எடுத்தார். 
ஆய்வு
அதன்படி கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினமே பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போடும் பணி நேற்று காலை நடந்தது.  இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்து வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இந்த பணியை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தாசில்தார் தியாகராஜன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்