மதுரை, ஜூலை
மதுரை சிந்தாமணி ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 20), ஆட்டோ டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இவரது உயிர் நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தினேஷ் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.