4 வயது சிறுவனிடம் நகை திருட்டு

காதணி விழாவில் 4 வயது சிறுவனிடம் நகை திருடப்பட்டது.;

Update:2021-07-28 22:50 IST
வாடிப்பட்டி, ஜூலை
மதுரை சமயநல்லூர் அருகே ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 54). இவரது 4 வயது பேரனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் காதணி விழா நடத்தினார். அப்போது அந்த சிறுவன் அணிந்திருந்த 1¼ பவுன் தங்க தோடை கூட்டத்தில் யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்