மின்வயர்கள் திருட்டு
மின்வயர்கள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்,
மேலூர் அருகே உள்ள பதினெட்டான்குடியில் தனபாலன் என்பவரின் விவசாய தோட்டம் உள்ளது. இங்குள்ள மின்வயர்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.