கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி தர்க்காகுடி விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கொட்டாம்பட்டி போலீசார், வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.