முன் விரோதத்தில் தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு

முன் விரோதத்தில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-08-02 20:05 GMT
திருமங்கலம்,ஆக.
திருமங்கலம் குதிரைசாரிகுளத்தில் முருகன் என்பவர் கிரில் கேட் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு முருகனின் தம்பி முத்து (வயது 44) மற்றும் இவரது 14 வயது மகன் ஆகியோர் கடையில் இருந்தனர். அப்போது 2 பேர் அங்கு வந்து எங்கள் வீட்டுக்கு கேட் அமைக்க வேண்டும், அளவு எடுக்க வருமாறு கூறி முத்துவையும், அவரது மகனையும் அழைத்துச் சென்றனர்.
தருமத்துப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென அரிவாளால் முத்துவையும், அவரது மகனையும் வெட்டினர். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தபோது மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர் படுகாயம் அடைந்த 2 பேரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்