22 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-03 19:47 GMT
மதுரை, ஆக
மதுரை மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 17 பேர் நகர் பகுதியைச்  சேர்ந்தவர்கள். அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதில் 19 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 259 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

மேலும் செய்திகள்