மதுரை
மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குருவிக்காரன் சாலையில் கஞ்சா விற்று கொண்டிருந்த சக்கரபாணி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல் தப்பி ஓடிய மணிகண்டன், அசாருதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.