நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி; தம்பதி கைது
சினிமா பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை,
இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி இந்திரா பானுமதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
மேலும், இந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் தங்களிடம் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிக லாபம் மற்றும் அதிக வட்டி தருவதாக இதுபோன்ற மோசடி நிறுவனங்களின் போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.