ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ.51 ஆயிரத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்
ரூ.2 லட்சம் கடனுதவி தருவதாக ஆசைக்காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.51 ஆயிரத்தை முகநூல் மூலம் மோசடி செய்த நபரை போலீசார் தேடுகிறார்கள்.
மதுரை,
ரூ.2 லட்சம் கடனுதவி தருவதாக ஆசைக்காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.51 ஆயிரத்தை முகநூல் மூலம் மோசடி செய்த நபரை போலீசார் தேடுகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் குமரேஸ் (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நான் தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டேன். இதற்கிடையே கடந்த 28-ந் தேதி முகநூல் பார்த்துக்கொண்டிருந்த போது "லோன்ஸ் இன் தமிழ்நாடு' என்ற பக்கத்தில் ஒரு செல்போன் எண் இணைக்கப்பட்டிருந்தது. கடனுதவி பெறலாம் என எண்ணி அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டேன். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை.
ரூ.51 ஆயிரம் மோசடி
இதற்கிடையே மீண்டும் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. நூதன முறையில் என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விழிப்புணர்வு