ஹெலிகாப்டர் மூலம் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை
மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தேசிய பாதுகாப்பு படை
இதற்கிடையே, கடந்த 2 தினங்களாக தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
ஒத்திகை
100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கலந்துகொண்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர். இதனால், அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
விமான நிலையம்
இதனை தொடர்ந்து நேற்று இரவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் மதுரை விமான நிலையத்தில் இக்குழுவினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.