அரசு பஸ் டிரைவரிடம் தகராறு; வாலிபர் கைது
அரசு பஸ் டிரைவரிடம் தகராறு; வாலிபர் கைது
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே குலமங்கலத்திலிருந்து பெரியார் நிலையம் சென்ற அரசு டவுன் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையொட்டி அதே ஊரை சேர்ந்த பாண்டித்துரை(வயது 33) என்பவர், பஸ் டிரைவர் ரமேஷ்(43) என்பவரிடம் தகராறு செய்தார். அரசு பணியை செய்ய விடாமல் தகராறு செய்ததாக, ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாண்டித்துரை மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.