வீடுபுகுந்து நகை திருடியவர் கைது; 10 பவுன் மீட்பு

வீடுபுகுந்து நகை திருடியவர் கைது; 10 பவுன் மீட்பு

Update: 2021-08-07 18:33 GMT
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே காமராஜ் நகரை சேர்ந்தவர் சத்யா. இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.22 ஆயிரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடி சென்றனர். இது தொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று உத்தப்பநாயக்கனூர் அருகே மொண்டிக்குண்டு பிரிவு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வாலாந்தூரைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 22) என்பது தெரியவந்த்து. மேலும் இவர்தான் சத்யா வீட்டில் பணம், நகையை திருடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் 22 ஆயிரம் பணத்தை செலவு செய்துவிட்டதாகவும், நகை மட்டுமே கைவசம் உள்ளதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து 10 பவுன் நகையை மீட்டனர்.

மேலும் செய்திகள்