புதிதாக 167 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கொரோனா உறுதியானது. முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 169 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 167 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 95 ஆயிரத்து 559 ஆக உயர்ந்தது. இதில் 93 ஆயிரத்து 208 பேர் குணமடைந்து உள்ளார்கள்.
இதில் நேற்று மட்டும் 174 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 1,710 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே 74 வயது முதியவர் கடந்த 7-ந் தேதி கொரோனாவுக்கு உயிரிழந்தார். இதுவரை மொத்தம் 641 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.