கஞ்சா விற்றவர் கைது

மதுரையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-20 21:21 GMT
புதூர்,

மதுரை ஒத்தகடை போலீஸ் சரக இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று பிடித்தனர். அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் இருந்த பையை பரிசோதித்த போது அதில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது ெதரிய வந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் ஒத்தக்கடையை சேர்ந்த தமீம் அன்சாரி(வயது 20), கஞ்சா விற்ற போது போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்