பாராட்டு

யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

Update: 2021-08-26 20:31 GMT
மதுரை
மதுரை யோகா தியான பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான யோகாசன போட்டி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது, இந்த யோகாசன மூன்று பிரிவு போட்டிகளாக நடந்தது. இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரையிடம் பதக்கம், சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது வெற்றி பெற்ற மாணவர்களை மற்றும் யோகாசன பயிற்சியாளர் அசாரூதீன் ஆகியோரை போலீஸ் துணை கமிஷனர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்