லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமை வழக்கில் லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மதுரை,
இந்த நிலையில் தனது மனைவி அணிந்திருந்த நகைகளை வாங்கி ராமர் அடகு வைத்து மது குடித்து செலவு செய்துள்ளார். மீண்டும் மனைவியை அவரது பெற்றோரிடம் நகை கேட்டு வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி உள்ளார்.இதனை அறிந்த பெண்ணின் தந்தை காசிமாயன் செல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.முடிவில் ராமர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிருபாகரன்மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.