சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாா்.;

Update:2021-08-31 01:54 IST
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக இவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. அவ்வாறு மாத்திரை சாப்பிடுவதால் அதிக நேரம் தூங்குவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். 
இந்த நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் சுரேஷ் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது. இதில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்