மதுரை
மதுரை பெருங்குடி அருகே உள்ள வலையங்குளத்தை சேர்ந்தவர் மாலைமுத்து. இவருடைய மகன் செல்வம்(வயது 19). கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று பரம்புபட்டியில் இருந்து வலையங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.