கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

Update: 2021-09-01 20:49 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் கண்மாய்கரை அருகே உள்ள கிணற்றில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் சகுபர்சாதிக், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் உள்பட தீயணைப்பு படையினர் கிணற்றில் மிதந்த பிணத்தை மீடடு கரைக்கு கொண்டு வந்தனர். சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் ஆகியோர் இறந்தவர் அணிந்திருந்த கண் கண்ணாடி மற்றும் கரையிலிருந்த சட்டையை வைத்து விசாரணை செய்தனர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் சக்திவேல்(35) என்பது தெரியவந்தது. சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். போலீசார் விசாரணையில் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்