ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 137 பேர் பாதிக்கப்பட்டனர்.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 141 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 545 ஆக உயர்ந்தது. இதில் 96 ஆயிரத்து 510 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். நேற்று மட்டும் 156 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். தற்போது 1,378 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 657 பேர் பலியாகி உள்ளனர்.