ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 132 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-09-02 21:46 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 137 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 677 ஆக உயர்ந்தது. இதில் 96 ஆயிரத்து 662 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். நேற்று மட்டும் 152 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். தற்போது 1,358 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 657 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்