ஐதராபாத், புனேவில் இருந்து 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-09-03 06:01 GMT
தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. தமிழகத்தில் இதுவரை சுமார் 3 கோடியே 11 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்த நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 67 பெட்டிகளில் 8 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும், அதேபோல் ஐதராபாத்தில் இருந்து 95 ஆயிரத்து 250 ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளும் சென்னை வந்தன.

சென்னைக்கு வந்த 8 லட்சத்து 95 ஆயிரத்து 250 தடுப்பூசிகளும் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்